search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் ரம்மி"

    • ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாரண்டஅள்ளி:

    தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி பாலசுப்ரமணியம் தெருவில் வசித்து வந்தவர் விஜய் (வயது 36) இவருக்கு கனிமொழி என்ற மனைவியும், கவின், காரண்யா என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். விஜய் பெங்களூரில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபாடு கொண்ட அவர் கடந்த 3 மாதத்திற்க்கு முன் பெரும் தொகையை சூதாட்டத்தில் இழந்தார். இதனால் விரக்தியில் இருந்து வந்தவர். கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்கு போட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று விஜய்யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தந்தை இன்னும் 2 நாட்களுக்கு வீட்டை அடமானம் வைத்து பணத்தை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
    • ஆன்லைன் சூதாட்டத்தால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

    திருவெண்ணைநல்லூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏரி வண்டி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ஜெயராமன் (வயது29). இவர் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    அங்கு ஆன்லைன் சூதாட்டம் விளையாடி 18 லட்சம் இழந்துள்ளார். பணம் கொடுத்தவர்கள் பல்வேறு கோணத்தில் ஜெயராமனை நெருக்கடி செய்யவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஐதராபாத்திலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்து தனது தந்தையிடம் நான் ஆன்லைன் சூதாட்டத்தில் 18 லட்சத்தை இழந்து உள்ளேன் பணத்தை கட்டாவிட்டால் என்னை போலீசில் சிக்க வைத்து விடுவார்கள். என்னை கைது செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள் என கூறியுள்ளார். அவரது தந்தை இன்னும் 2 நாட்களுக்கு வீட்டை அடமானம் வைத்து பணத்தை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு 9 மணியிலிருந்து ஜெயராமன் தனியாக யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தார் கடைசியாக அவரது அண்ணனிடம். நான் ரெயிலில் அடிபட்டு சாகப் போகிறேன் என கூறிவிட்டு சரியாக 9.50 மணியில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் வந்தே பாரத் ரெயில் 15 நிமிடம் நின்றது. வந்தே பாரத் ரெயில் டிரைவர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு மீண்டும் ரெயில் கிளப்பி சென்னை நோக்கி சென்றார்.

    தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயராமன் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆன்லைன் சூதாட்டத்தால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆன்லைன் ரம்மிக்கு அரசால் தடை பெற முடியவில்லை.
    • தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் நாம் வாக்களிக்கக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை பெருங்குடியில் தங்கி அங்குள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த குருராஜன் என்ற பொறியாளர், ஆன்லைன் ரம்மியில் பெருமளவில் பணத்தை இழந்ததாலும், அதற்காக வாங்கியக் கடனை திரும்ப அடைக்க முடியாததாலும் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

    தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்த பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியுள்ள நான்காவது உயிர் குருராஜன் ஆவார். ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

    தமிழ் நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ள ஆன்லைன் ரம்மியை தடை செய்ய இரு முறை சட்டம் இயற்றியும் அதை தடை செய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து தடை பெறுவது தான் இப்போதுள்ள ஒரே தீர்வு ஆகும். ஆனால், ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு 5 மாதங்களாகியும், அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் இன்னும் ஆன்லைன் ரம்மிக்கு அரசால் தடை பெற முடியவில்லை.


    சுப்ரீம் கோர்ட்டுக்கு அழுத்தம் கொடுத்து வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    அவர் தனது எக்ஸ்தள பதிவில் வெளியிட்டிருப்பதாவது:-

    நாள்காட்டியில் இன்றைய நாள் ஏப்ரல் ஒன்று. இந்த நாள் இப்போது அழைக்கப்படும் நாளாகவே நீடிக்கட்டும். இந்த நாளை நாம் வாக்காளர்கள் நாளாக மாற்றி விடக்கூடாது. அவ்வாறு மாற்றி விடாமல் இருப்பதற்கு வரும் 19-ந் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும் நாம் வாக்களிக்கக் கூடாது.

    வாக்களிப்பீர் பா.ம.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு. வாக்களிப்பீர் மாம்பழம், தாமரை, சைக்கிள், குக்கர் , பலா ஆகிய சின்னங்களுக்கு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
    • போலீசார் விசாரணை நடதி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு பலரும் அடிமையாகி இருக்கின்றனர். இதன் காணமாக பலர் கடன் வாங்கிக்கூட ஆன்லைன் ரம்மி விளையாடுகிறார்கள். இவ்வாறு விளையாடுபவர்கள் பலர் ஆயிரம் மற்றும் லட்சக்கணக்கான பணத்தை இழப்பதாகவும் கூறப்படுகிறது.

    அப்படி பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் அரங்கேறுகிறது. இதனால் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தமிழக சட்ட சபையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆன்லைன் ரம்மிக்கு எதிராக தடை சட்டம் இயற்றப்பட்டது.

    இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஆன்லைன் ரம்மியில் ரூ.3 லட்சத்தை இழந்த வாலிபர் ஒருவர், அந்த பணத்தை திருப்புவதற்காக திருட்டில் ஈடுபட்டுள்ளார். கேரள மாநிலம கோட்டயம் பாளை பரங்கனம் பகுதியை சேர்ந்த அமல் அகஸ்டின் என்ற வாலிபர் ரம்மி விளையாட கடனுக்கு பணம் வாங்கியிருக்கிறார்.

    ரம்மி விளையாட்டில் அவர் 3 லட்ச ரூபாயை இழந்திருக்கிறார். வாங்கிய இடத்தில் பணத்தை திருப்பி கொடுக்கவேண்டிய நிர்பந்தத்துக்கு அமல் அகஸ்டின் தள்ளப்பட்டார். இதனால் பணத்துக்கு என்ன செய்வதென்று யோசித்த அவர், திருட்டில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.

    அதன்படி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட அமல் அகஸ்டின் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். அவருக்கு எந்தெந்த திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருக்கிறது? என்று போலீசார் விசாரணை நடதி வருகின்றனர்.

    • ரம்மி விளையாட்டை வடிவமைத்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இதில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றனர்.
    • நேரடியாக விளையாடும்போது முழு பணமும் கையில் கிடைக்கும்.

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கு கடந்த 7ம் தேதி விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தமிழ்நாடு அரசாங்கம் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களின்போது, "இந்த விளையாட்டு பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்துவதால் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவு. ரம்மி விளையாட்டை நேரில் விளையாடும் போதுதான் அதை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும். இந்த விளையாட்டை வடிவமைத்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இதில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றனர்.

    விளையாடுவோரின் சுய அறிவிப்பு எப்படி சரி பார்க்கப்படுகிறது என இந்த நிறுவனங்கள் விளக்குவதில்லை. மேலும் விளையாடுபவர்கள் தாங்கள் வென்ற முழு தொகையையும் தாங்களே எடுத்து கொள்ள முடியாது. ஒரு பகுதியை ஆன்லைன் நிறுவனங்கள் எடுத்து கொள்ளும்.

    நேரடியாக விளையாடும்போது முழு பணமும் கையில் கிடைக்கும்" என்று அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "ரம்மியை திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் சட்டம் ரம்மியை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக எப்படி வகைப்படுத்தியது?" என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

    • ரம்மி விளையாட்டை நேரில் விளையாடும் போதுதான் அதை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும்.
    • ஆன்லைனில் விளையாடுபவர்கள் தாங்கள் வென்ற முழு தொகையையும் தாங்களே எடுத்து கொள்ள முடியாது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தமிழ்நாடு அரசாங்கம் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களின் விவரங்கள்:

    இந்த விளையாட்டு பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்துவதால் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவு. ரம்மி விளையாட்டை நேரில் விளையாடும் போதுதான் அதை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும். இந்த விளையாட்டை வடிவமைத்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இதில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றனர். விளையாடுவோரின் சுய அறிவிப்பு எப்படி சரி பார்க்கப்படுகிறது என இந்த நிறுவனங்கள் விளக்குவதில்லை. மேலும் விளையாடுபவர்கள் தாங்கள் வென்ற முழு தொகையையும் தாங்களே எடுத்து கொள்ள முடியாது. ஒரு பகுதியை ஆன்லைன் நிறுவனங்கள் எடுத்து கொள்ளும். நேரடியாக விளையாடும்போது முழு பணமும் கையில் கிடைக்கும். இவ்வாறு அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வழக்கில் அரசாங்கத்தின் சார்பாக அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரமும், மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கபில் சிபல் ஆகியோர் ஆஜராகிறார்கள்.

    இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை இம்மாதம் 14ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

    • ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
    • தமிழக அரசின் பதில் வாதத்துக்காக விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    இன்று மத்திய அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதாகவும், இதன்மூலம் ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டம் நடைபெறுவது தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த வாதத்தை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் பதில் வாதத்துக்காக விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டு, திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், அதற்கு தடை விதித்து சட்டம் இயற்ற முடியாது என ஆன்லைன் விளையாட்டு நிறுவன வழக்கறிஞர்கள் வாதாடியது குறிப்பிடத்தக்கது.

    • சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை வகுத்து அதை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது.
    • விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.

    சென்னை:

    ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை வகுத்து அதை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது.

    இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி முறையீடு செய்தார். அப்போது மனுதாக்கல் செய்து, மனு முறையாக இருந்தால் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும், இல்லாவிட்டால் வழக்கமான பட்டியலில் இடம்பெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணப்பாறை:

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்து, கடனாளியாகி கடைசியில் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்கின்றன.

    ஏற்கனவே தமிழ்நாட்டில் 41 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்தனர். 42-வது நபராக கடந்த 24-ந்தேதி மத்திய அரசுக்கு சொந்தமான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்த ரவிசங்கர் (வயது 40) என்பவர் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ரூ.6 லட்சம் பணத்தை இழந்திருந்தார்.

    இதனால் மன விரக்தியுடன் இருந்த அவர் அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்தார். இந்த நிலையில் தற்போது 43-வது நபராக திருச்சி மணப்பாறை பகுதியில் கூலி தொழிலாளி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். அது பற்றிய விபரம் வருமாறு:-

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள அஞ்சல்காரன்பட்டி கிராமம் சவேரியார்புரம் பகுதியை சேர்ந்தவர் மரிய பொன்னுசாமி. இவரது மகன் வில்சன் (26). கோவையில் உள்ள ஒரு டீக்கடையில் வடை மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் சிறு வயதிலேயே திருமணம் செய்துள்ளார். தற்போது அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் பாழாய் போன ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டது. கூலி வேலை செய்து சம்பாதிக்கும் சொற்ப வருமானத்தையும் ஆன்லைன் ரம்மியில் இழந்து வந்தார். தொடக்கத்தில் அவரது தந்தை இதனை கண்டித்தார். ஒரு கட்டத்தில் கையிருப்பு கரையவும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் தந்தையின் கடிவாளத்தில் இருந்து தப்பிக்க மனைவி, குழந்தைகளுடன் தனிக்குடித்தனம் சென்றார். பின்னர் மனைவியின் கண்களை மறைத்து தொடர்ந்து ஆன்லைன் ரம்மியை விளையாட்டை தொடர்ந்தார்.

    இதற்கிடையே குடும்பச் செலவுகளுக்கும் பணம் கொடுப்பதை சுருக்கிக்கொண்டார். குடும்பம் நடத்தவும், குழந்தைகளை வளர்க்கவும் அவரது மனைவி தவித்து வந்தார். பலமுறை கண்டித்தும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை வில்சன் கைவிடவில்லை. இதனால் குடும்பத்திலும் பிரச்சினைகள் ஏற்பட்டதாக தெரிகிறது.

    மேலும் இதுவரை அவர் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ரூ.4 லட்சம் வரை பணத்தை இழந்திருந்தார்.

    இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வில்சன் நேற்று கோவையில் இருந்து ஊருக்கு வந்திருந்தார். பின்னர் இரவு குடும்பத்தினருடன் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். நள்ளிரவில் எழுந்த அவர் திடீரென்று தனி அறைக்கு சென்று தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார்.

    அதைத்தொடர்ந்து சத்தம் கேட்டு எழுந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் இன்று அதிகாலை வில்சன் சிகிச்சை பள்ளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒருவர் திருச்சியில் தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய தமிழக அரசு போராடி வருகிறது.

    தமிழக சட்டசபையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்தது பின்னர் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த தடை மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார்.

    அதன் பின்னர் கடந்த 23-ந்தேதி மீண்டும் அந்த மசோதா சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மீண்டும் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
    • ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் தங்கள் கருத்துக்களை முன் வைத்து பேசினார்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் இயற்ற தமிழக அமைச்சரவை கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ந்தேதி ஒப்புதல் அளித்தது. அக்டோபர் 1-ந்தேதி அவசர சட்டத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

    இதையடுத்து தமிழக சட்டசபையில் அக்டோபர் 19-ந்தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட் டது. பின்னர் கவர்னர் ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ந்தேதி அனுப்பப்பட்டது. அதற்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை.

    சட்ட மசோதாவில் சில விளக்கங்கள் கேட்டு கவர்னர் ஆர்.என்.ரவி நவம்பர் 24-ந்தேதி அரசுக்கு கடிதம் எழுதினார். அதற்கு சட்டத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி அமைச்சர் ரகுபதி மற்றும் அதிகாரிகள் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்தினார்கள். அப்போது சட்ட மசோதா சம்பந்தமாக கவர்னர் ரவி சில சந்தேகங்களை எழுப்பினார். அதற்கு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

    இந்த நிலையில் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி கடந்த 6-ந்தேதி சட்ட மசோதாவை அரசுக்கு கவர்னர் ரவி திருப்பி அனுப்பினார்.

    அதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.

    அதன்படி தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டசபையில் கவர்னர் கடந்த 6-ந்தேதி திருப்பி அனுப்பிய தமிழ்நாடு இணைய வழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணைய வழி விளையாட்டுக்களை ஒழுங்கு முறைப்படுத்துதல் சட்ட மசோதாவை மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அனுமதி கோரினார்.

    இதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார். இதைத் தொடர்ந்து இந்த சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி தரவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

    இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதிகப்படியான பணத்தை இழந்ததன் காரணமாக மனமுடைந்து, இதுவரை 41 பேர் தற்கொலை செய்து கொண்ட துயரமான நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதே என்ற வேதனையோடுதான் எனது உரையை நான் தொடங்குகிறேன்.

    பள்ளி செல்லும் மாணவர்களுக்கிடையே, இணைய வழி விளையாட்டு எந்தவித பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, பள்ளிக்கல்வித்துறை ஜூலை 2022-ல் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இந்தக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டிலுள்ள 2,04,114 அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் கருத்து கோரப்பட்டது. மாணவர்களின் ஒரு முகப்படுத்தும் திறனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 74 சதவீதம் ஆசிரியர்கள் சொன்னார்கள். மாணவர்களின் நுண்ணறிவு ஈவு, எழுதும் திறன் மற்றும் படைப்பாற்றலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக 64 சதவீதம் ஆசிரியர்கள் சொன்னார்கள்.

    இணையதள விளையாட்டு உரிமையாளர்கள் மற்றும் இதர தரப்பினரிடையே நடத்தப்பட்ட ஆலோசனையின்படியும், பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு 26-9-2022 அன்று அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.

    ஆனால், சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை 131 நாட்கள் கழித்து, சில குறிப்புகளுடன் 6-3-2023 அன்று சட்டப்பேரவைத் தலைவருக்கு கவர்னர் திருப்பி அனுப்பி உள்ளார். கவர்னர் எழுப்பியுள்ள கேள்விகளும், அதற்கான பதில்களும் அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு, சட்டமன்றக் கூட்டத்தொடரில் மீண்டும் பரிசீலனைக்கு வைக்கும் கருத்துருவானது அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்ட முன்வடிவானது உறுப்பினர்களின் பார்வைக்கு மீண்டும் வைக்கப்பட்டு உள்ளது. மீண்டும் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இதனை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த சட்டம் அறிவால் மட்டுமல்ல, இதயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம் என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

    இனியொரு உயிர் பறிக்கப்படாமல்; இனியொரு குடும்பம் நடுத்தெருவில் நிற்காமல்; இனியொரு நாள்கூட இந்த ஆன்லைன் அநியாயம் தொடராமல் இருக்க அனைத்து உறுப்பினர்களும் இந்தச் சட்ட முன்வடிவை ஆதரிக்க வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதன் மீது ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் தங்கள் கருத்துக்களை முன் வைத்து பேசினார்கள். இதைத் தொடர்ந்து சட்ட மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேறியது.

    • சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
    • ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏக்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து பேசினார்கள்.

    சென்னை :

    தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி கடந்த 6-ந்தேதி சட்ட மசோதாவை அரசுக்கு கவர்னர் ரவி திருப்பி அனுப்பினார்.

    அதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.

    அதன்படி தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பது குறித்து அறிவுரை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தோம். மாணவர்களின் படைப்பாற்றல் பாதிக்கப்படுவதாக குழு அறிக்கை அளித்தது. தற்கொலையை தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது. ஆன்லைன் தடை மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    மசோதா மீது ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏக்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து பேசினார்கள். இதைதொடர்ந்து சட்ட மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    • மாணவர்களின் படைப்பாற்றல் பாதிக்கப்படுவதாக குழு அறிக்கை அளித்தது.
    • தற்கொலையை தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் இயற்ற தமிழக அமைச்சரவை கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ந்தேதி ஒப்புதல் அளித்தது. அக்டோபர் 1-ந்தேதி அவசர சட்டத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

    இதையடுத்து தமிழக சட்டசபையில் அக்டோபர் 19-ந்தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் கவர்னர் ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ந்தேதி அனுப்பப்பட்டது. அதற்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை.

    சட்ட மசோதாவில் சில விளக்கங்கள் கேட்டு கவர்னர் ஆர்.என்.ரவி நவம்பர் 24-ந்தேதி அரசுக்கு கடிதம் எழுதினார். அதற்கு சட்டத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி அமைச்சர் ரகுபதி மற்றும் அதிகாரிகள் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்தினார்கள். அப்போது சட்ட மசோதா சம்பந்தமாக கவர்னர் ரவி சில சந்தேகங்களை எழுப்பினார். அதற்கு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

    இந்த நிலையில் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி கடந்த 6-ந்தேதி சட்ட மசோதாவை அரசுக்கு கவர்னர் ரவி திருப்பி அனுப்பினார்.

    அதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.

    அதன்படி தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    மசோதா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பது குறித்து அறிவுரை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தோம். மாணவர்களின் படைப்பாற்றல் பாதிக்கப்படுவதாக குழு அறிக்கை அளித்தது. தற்கொலையை தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது. ஆன்லைன் சூதாட்ட  தடை மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றவேண்டும்.


    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேசினார்.

    ×